சிட்டே சிட்டே கலங்காதே
சிறிதும் நீயும் அஞ்சாதே
பட்டுப்பூவே பதறாதே
பட்டினம் பார்த்து பதறாதே
கொட்டிக் கிடக்கும் தானியங்கள்
கொத்தி தின்பாய் இயல்பாக
கொரோணா பீதீயில் மக்களிங்கே
கொல்லை நோயால் வாடுகின்றார்
தனிமைச் சிறையில் அடைவதற்கு
தனித்தனியாக வீடிருக்கு
பணிசெய் வீதியில் வாழ்வோருக்கு
படுக்க பாயும் கூழும் இல்லை
உன்னைப் போலவே ஏழைமக்கள்
உலகம் முழுக்க வாடுகின்றார்
சின்னப் பூவே என்செய்வாய்
சிந்தை கலங்கி நிற்கின்றேன்
மனிதர் புரிந்து தனிமையிலே
மறுக்காமல் இருந்தார் ஆனாலே
இனியும் கொரோணா பரவாது
இறப்பும் அதிகம் இருக்காதே
உன்னைப் போல. பறவைகளும்
உழைக்கும் ஏழைப் பாமரரும்
நன்றாய் இருக்க வேண்டுமென
நமது இயற்கை நினைத்திடுமே
கதவுகள் அடைத்து இருந்தாலும்
கவலை வேண்டாம் சிட்டுகளே
சன்னலில் தானியம் நீரிருக்கு
மின்னல் போல் வந்து தின்பீர்
கூடுகள் அடைவீர் குருவிகளே
குஞ்சுகள் காப்பீர் குருவிகளே
நாடுகள் கடந்த கொரோணாவை
நாமும் எதிர்த்து மீண்டிடுவோம் !