Tuesday, June 12, 2018

நகரத்து மாடு


ஆடி அசைந்து இலட்சுமி மாடு  நடந்துவந்தது
அப்படி இப்படி பார்த்து பார்த்து நடந்துவந்தது
வீட்டு  அருகில் வந்ததுமே நின்று பார்த்தது
விவரம் புரிந்த அம்மா உள்ளே சென்றனள்

கழுத்தை ஆட்டி மாடு எனக்கு வணக்கம் சொன்னது
கண்ட உடனே எனக்கும பெரு மகிழ்ச்சி நிறைந்தது
எழுத்து கூட்டி சுவரொட்டியை படிக்கத் தொடங்கினேன்
எளிதாய்  மாடும் சுவரொட்டி கிழித்து தின்றது

உள்ளேயிருந்து  அம்மா கஞ்சித் தண்ணீர் கொண்டு வைத்தாள்
உறிஞ்சிக் குடித்து மாடும் சோற்றை மென்று சுவைத்தது
எல்லா நாளும் வரும் மாட்டை சிலநாள் காணல
எழிலன் சந்தையில் பார்த்ததாக என்னிடம் சொன்னான்

காடுவயல் கழனியெல்லாம் மேய்ந்திடும் மாடு
கான்கிரீட்டு காடுகளால் அடைந்ததே தொல்லை
நாடுவிட்டு  நாடுசென்ற  ஏதிலி போலே
நகரத்து மாடுகளும் ஆனது தானே

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...