ஏரைக் கொண்டு நிலம் உழுவான்
எல்லோ ருக்கும் உணவ ளிப்பான்
பாரை உயர்த்த உழைத்திடுவான்
பட்டினி யின்றிக் காத்திடுவான்
காலைக் கருக்கலில் எழுந்திடுவான்
கலப்பை தோளில் சுமந்திடுவான்
ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும்
ஓயாமல் உழைப்பை ஈந்திடுவான்
கால்நடைக் காத்து மகிழ்ந்திடுவான்
கவலை மறந்தே வாழ்ந்திடுவான்
தோல் கருப்பாக இருந்தாலும்
தூய உள்ளம் பெற்றிருப்பான்
உழவர் உழைப்பை மதித்திடுவோம்
உண்மை அன்பால் வாழ்த்திடுவோம்
மழையைப் போலே பலன்கருதா
மான்பைப் போற்றி வணங்கிடுவோம்.
Saturday, January 14, 2012
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...
No comments:
Post a Comment