
குளிர்ந்த நிலவே வாராய்
குழந்தை மகிழ வாராய்
நெளிந்த நீரில் நீந்தும்
திங்கள் படகே வாராய்
நெளியும் பாம்பாய் மேகம்
நின்னைத் தீண்ட ஏகும்
வளியும் விலக்கப் பொலிவாய்
வனப்பு நிலவே வாராய்
தேய்ந்து வளர்ந்து வருவாய்
தினமும் புதுமைப் புரிவாய்
ஆய்ந்து அறிந்து உன்னில்
அடுக்ககம் கட்ட முயல்வார்
ஓய்தல் இன்றி நீயும்
உலகைச் சுற்று கின்றாய்
காய்தல் உவத்தல் இன்றி
கடமை செய்வாய் வாராய்
No comments:
Post a Comment