Tuesday, April 6, 2010

மரம்


மண்ணில் வளரும் நிழற்குடை
விண்ணின் நண்பன் மழைக்குடை
தண்ணீர் உறிஞ்சி வளர்ந்திடும்
கண்ணில் குளுமை வழங்கிடும்

நச்சுக் காற்றை சுவாசிக்கும்
நல்லக் காற்றை வெளியிடும்
உச்சி நோக்கிச் சென்றிடும்
உயர்வை நமக்கு போதிக்கும்

கிளைகள் அசைத்துப் பேசிடும்
கிளிகள் அமர்ந்தால் பழந்தரும்
இலைகள் பச்சயம் தயாரிக்கும்
இனிதாய் மரமும் வாழ்ந்திடும்

வேர்கள் பரப்பி நின்றிடும்
வேற்றுமை இன்றி நிழல்தரும்
ஊர்கள் முழுதும் வளருங்கள்
உலகம் செழிக்க உதவுங்கள்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...