Saturday, February 27, 2010

மரக்குதிரை


நேராய் நிற்கும் குதிரை
நெஞ்சு நிமிர்ந்த குதிரை
சீராய் ஆட்டி விட்டால்
சீறிப் பாயும் குதிரை

நின்ற இடத்தில் ஓடும்
நெஞ்சம் மகிழ ஆடும்
தொன்று தொட்டு குழந்தை
துயர் விரட்டும் குதிரை

பாப்பா தம்பி சேர்த்து
சோக்காய் சுமக்கும் குதிரை
தோப்பும் துறவும் போகும்
தூர தேசம் போகும்

ஒரே இடத்தில் நின்றே
உலகைச் சுற்றும் குதிரை
தரையில் டக் டக் என்றே
தாளம் போட்டு ஓடும்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...