Wednesday, July 20, 2016

மாம்பழம்

சித்திரை மாத வெய்யிலில்
சிரிக்கும் கிளையில் மாம்பழம்
கத்திரி வெய்யில் ஆனாலும்
கனிந்து இனிக்கும் மாம்பழம்

விருந்தில் வைக்கும் மாங்கனி
விரும்பி உண்ணும் கிளைக்கனி
நறுந்தேன் போல சுவைத்திடும்
நல்ல பழமே மாங்கனி

இதயம் போன்ற வடிவிலே
இருக்கும் இனிய தேன்கனி
இனிப்பால் உள்ளம் ஈர்த்திடும்
இயற்கை கொடையே மாங்கனி

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...