தாத்தா பாட்டி வழியிலே
தாயும் தந்தையும் வந்தனர்
காத்துக் குடும்பம் போற்றினர்
கண்ணி யமாய் வாழ்ந்தனர்
அக்கா அண்ணன் என்றுமே
தம்பித் தங்கையர் கூடியே
மாமா அத்தை சேர்ந்துதான்
மகிழ்ச் சியாக வாழ்ந்தனர்
உலக அரங்கில் குடும்பமே
உயர்ந்த அமைப்பாய் இருக்குது
கவலை மகிழ்ச்சி அனைத்தையும்
கலந்து பேசி ஏற்கிறார்
No comments:
Post a Comment