Wednesday, July 20, 2016

மரமே நலந்தானா?

மரமே மரமே நலந்தானா?
மண்ணுக்குள் வேரும் சுகந்தானா?
வரமாய் வந்த மரமேநீ
வாடிட நானும் விடுவேனா?

நச்சுப் புகையால் நலிந்துவிட்டாய்
நாளும் வெட்டிடக் குறைந்துவிட்டாய்
மச்சு மாளிகை வீடுகளில்
கதவாய் சன்னலாய் மாறிவிட்டாய்

மழைபெற உன்னை வளர்த்திடுவேன்
மண்ணும் வளம்பெற வளர்த்திடுவேன்
விழைந்து உன்னைக் காத்திடுவேன்
உயிர்வளி பெற்று வாழ்ந்திடுவேன்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...