Wednesday, July 20, 2016

உறவுகள்

வீட்டுத்  தோட்டந் தன்னிலே
விதவித மாய் மரங்களாம்
நோட்டம் விட்டுப் பார்த்திட்டேன்
நொடியில் ஒருமை கண்டிட்டேன்

மரத்தைச் சுற்றிக் கொடிகளும்
மரநிழலில் செடிகளும்
இயல்பாய் தானே இருந்தன
இயற்கை அழகே அழகுதான்

பறவைகள் மரத்தில் அமர்ந்தன
பழங்கள் கொத்தித் தின்றன
இரவை மரத்தில் கழித்தன
இன்பமாகப் பறந்தன

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...