
முதன் முதலாய் திரை விலக்கி
முகத்தைக் காட்டுவான்
விதவிதமாய் உடை உடுத்தி
வேடம் கட்டுவான்
கட்டியக்காரன் மக்களோடு
கலந்துப் பழகுவான்
தொட்டில் பிள்ளை மகிழவும்
ஜோக்குகள் சொல்லுவான்
வந்த வேடம் கதையறிய
விளக்கத்தைக் கேட்பான்
தந்தனத்தோம் பாட்டுப்பாடித்
தாளத்தை அடிப்பான்
எந்த வேடம் என்றாலும்
எளிதில் மாறுவான்
சொந்த மாகப் பாட்டுப்பாடி
சோகத்தைக் கலைப்பான்
சிரிப்பாலே மக்களை எல்லாம்
சிந்திக்க வைப்பான்
குறிப்பாக நாட்டு நடப்பை
கிண்டலும் செய்வான்
No comments:
Post a Comment