Saturday, February 27, 2010

குயில்


குயிலின் வண்ணம் கருமை
குரலோ நல்ல இனிமை
பயிலும் பிள்ளை விரும்பும்
பாடல் என்றும் கரும்பு

தோற்றம் அழகு இல்லை
ஏற்றம் இசையின் எல்லை
மாற்றம் வேண்டி நாட்டில்
மனிதர் திருந்தக் கூவும்

உச்சிக் கிளையில் அமர்ந்து
உணர்வுத் தூண்டப் பாடும்
குச்சு வீட்டுக் குடிகளும்
கூடி மகிழப் பாடும்

கனக சுப்பு ரத்தினம்
கண்டு வியந்தக் குயிலே
மனத்தில் மாசு இல்லா
மக்கள் விரும்பும் குயிலே

1 comment:

  1. after ala.vallippa like kulanthai poet, you are dazzling with your simple and superb lines

    with regards
    padmanabhan

    ReplyDelete

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...