Tuesday, December 15, 2009

கை கழுவுவோம்


பாப்பா தம்பி ஓடிவா
பட்டே நீயும் ஓடிவா
அப்பா அம்மா சொல்கேட்டு
அவசியம் சுத்தம் பேணிவா

உணவு உண்ணச் செல்லுமுன்
ஒழுங்காய் கைகள் கழுவணும்
கழிவறை சென்று வந்தபின்
கழுவு கைகள் சோப்பாலே


உண்ட பின்னும் கழுவணும்

உணர்ந்தால் நன்மை உடலுக்கே
கண்ட இடத்தில் கைவைத்தால்
கிருமிகள் சேரும் அறிவாயே

கைகளில் அழுக்குச் சேர்ந்தாலோ
கட்டாயம் உடலுக்கு ஆபத்து
பையில் காசு இருந்தாலும்
பாப்பா சுத்தம் அவசியம்

அழுக்கு சேர்தல் குற்றமே
அதனால் நோய்கள் சேருமே
ஒழுக்கம் சுத்தம் பேணுதல்
உணர்ந்தால் வாழ்நாள் கூடுமே

2 comments:

  1. சுத்தம் பற்றிய கவிதை அருமை பாலா அருமை

    ReplyDelete

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...