அடி பெருத்த ஆலமரம்
அழகு விழுது ஆலமரம்
கிளை படர்ந்த ஆலமரம்
கிளிகள் கொஞ்சும் ஆலமரம்
சிறிய விதையில் பிறந்த மரம்
பெருமரமாய் வளர்ந்த மரம்
சிறுவர் ஆட நிழல் தரும்
பெரியோர் கூட இடம் தரும்
விழுதில் ஊஞ்சல் ஆடலாம்
விளையாடி நாளும் மகிழலாம்
இலையில் சோறு உண்ணலாம்
இயற்கை அழகை பருகலாம்
ஊரில் உள்ளோர் கூடும் மரம்
உழைப்பவர் ஓய்வு எடுக்கும் மரம்
பாரில் பசுமை ஆலமரம்
பாலர் போற்றிப் பாடுவோம்
Sunday, January 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...
No comments:
Post a Comment