Thursday, January 12, 2012

மண் பானை

குயவர் செய்த பானை
குளிர்ச்சி யான பானை
வயலின் சேற்றில் மணலை
கலந்து செய்த பானை

தண்ணீர் பிடித்து வைக்க
தமிழர் செய்த பானை
மண்ணின் கொடையாம் பானை
மக்கள் விரும்பும் பானை

இடுப்பில் பானை வைத்தே
இளைய பெண்டிர் போவார்
குடிப்பதற்கு தண்ணீர்
கொண்டு வந்தே சேர்ப்பார்

பானைத் தண்ணீர் குடித்தால்
பக்க விளைவே இல்லை
தேனைப் போன்ற நீரை
தினமும் குடித்து மகிழ்வோம்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...