குயவர் செய்த பானை
குளிர்ச்சி யான பானை
வயலின் சேற்றில் மணலை
கலந்து செய்த பானை
தண்ணீர் பிடித்து வைக்க
தமிழர் செய்த பானை
மண்ணின் கொடையாம் பானை
மக்கள் விரும்பும் பானை
இடுப்பில் பானை வைத்தே
இளைய பெண்டிர் போவார்
குடிப்பதற்கு தண்ணீர்
கொண்டு வந்தே சேர்ப்பார்
பானைத் தண்ணீர் குடித்தால்
பக்க விளைவே இல்லை
தேனைப் போன்ற நீரை
தினமும் குடித்து மகிழ்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
No comments:
Post a Comment