பாப்பா பாப்பா தமிழ்ப் பேசு
பச்சைக் கிளியைப் போல் பேசு
தம்பித் தம்பித் தமிழ்ப் பேசு
தாய் மொழி தானே நீ பேசு
அம்மா அப்பா எனச் சொல்லு
ஆங்கிலம் வேண்டாம் அயற்சொல்லு
மாமா அத்தை எனச் சொல்லு
மகிழ்ச்சி யாலே நீத் துள்ளு
வணக்கம் நன்றி எனச் சொல்லு
வாழ்வாய் தமிழ்போல் நீவென்று
இனிப் பென்றால்தான் நெஞ்சினிக்கும்
சிரிப் பென்றால்தான் களிப்பிருக்கும்
பனி யென்றால்தான் குளிரடிக்கும்
பாலென்றால் தான் பசிமறையும்
இனியும் இதைநீ மறவாதே
இனிய தமிழில் நீபேசு
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...
No comments:
Post a Comment