Sunday, January 22, 2012

கடை

புளியமர நிழலிலே
பூரணிப் பாட்டிக் கடையிலே
இட்டிலி வடையும் விற்கிறார்
இன்பமாய் வாங்கி உண்ணலாம்

எண்ணெய் அதிகம் இல்லாமல்
எந்த சாயமும் சேர்க்காமல்
மண்ணைச் சார்ந்த உணவுகள்
மணக்க மணக்கக் கிடைக்குமே

பயறு கிழங்கு அவித்தவை
பழங்கள் பலவும் அரியவை
வயிறு நிரம்ப உண்ணலாம்
வாராது நோய்கள் திண்ணமாம்

ஆவியல் வெந்த கொழுக்கட்டை
அரிசிமாவுப் புட்டுவகை
அனைவரும் உண்டு மகிழலாம்
அன்பாய் பாட்டியை வணங்கலாம்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...