புளியமர நிழலிலே
பூரணிப் பாட்டிக் கடையிலே
இட்டிலி வடையும் விற்கிறார்
இன்பமாய் வாங்கி உண்ணலாம்
எண்ணெய் அதிகம் இல்லாமல்
எந்த சாயமும் சேர்க்காமல்
மண்ணைச் சார்ந்த உணவுகள்
மணக்க மணக்கக் கிடைக்குமே
பயறு கிழங்கு அவித்தவை
பழங்கள் பலவும் அரியவை
வயிறு நிரம்ப உண்ணலாம்
வாராது நோய்கள் திண்ணமாம்
ஆவியல் வெந்த கொழுக்கட்டை
அரிசிமாவுப் புட்டுவகை
அனைவரும் உண்டு மகிழலாம்
அன்பாய் பாட்டியை வணங்கலாம்
Sunday, January 22, 2012
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...
No comments:
Post a Comment