Wednesday, January 11, 2012

பள்ளிக்கூடம்

நண்பர்கள் தோளில் கைபோட்டு
நானும் பள்ளிக்குச் சென்றிடுவேன்
நன்றாய் நானும் படித்திடுவேன்
நல்ல பேரை எடுத்திடுவேன்

சொல்லிக் கொடுக்கும் பாடங்களை
தொல்லை யில்லாமல் கேட்டிடுவேன்
மல்லிகைப் பூவின் மணம் போலே
மகிழ்ச்சி யாக ஏற்றிடுவேன்

படிக்காத பிள்ளைகள் படும்பாட்டை
பார்த்து நானும் படித்திடுவேன்
படித்து நானும் அறிவாலே
பலவுயர் தகுதிகள் அடைந்திடுவேன்

என்றன் வயதுப் பிள்ளைகளே
என்னோடு பள்ளிக்கு வாருங்கள்
நன்றாய் கல்விக் கற்றே நாம்
நாட்டை உயர்த்த உழைத்திடுவோம்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...