நண்பர்கள் தோளில் கைபோட்டு
நானும் பள்ளிக்குச் சென்றிடுவேன்
நன்றாய் நானும் படித்திடுவேன்
நல்ல பேரை எடுத்திடுவேன்
சொல்லிக் கொடுக்கும் பாடங்களை
தொல்லை யில்லாமல் கேட்டிடுவேன்
மல்லிகைப் பூவின் மணம் போலே
மகிழ்ச்சி யாக ஏற்றிடுவேன்
படிக்காத பிள்ளைகள் படும்பாட்டை
பார்த்து நானும் படித்திடுவேன்
படித்து நானும் அறிவாலே
பலவுயர் தகுதிகள் அடைந்திடுவேன்
என்றன் வயதுப் பிள்ளைகளே
என்னோடு பள்ளிக்கு வாருங்கள்
நன்றாய் கல்விக் கற்றே நாம்
நாட்டை உயர்த்த உழைத்திடுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...
No comments:
Post a Comment