Friday, January 20, 2012

சூறாவளி

சுத்திச் சுத்திக் காத்தடிக்குது
சூறா வளிக் காத்தடிக்குது
கத்திக் கத்திக் காக்கைகளும்
கண்ட திசையில் கண்மறையுது

தென்னை மரங்கள் நாணலைப்போல்
தேகம் வலைந்து ஒடியுது
பண்ணை வயலின் நெற்கதிர்கள்
பாய்ந்து தூரம் பறக்குது

ஓலைக் குடிசை காலியாகுது
ஓட்டு வீடும் ஓட்டையாகுது
ஆல மரமும் அடிசாயுது
ஆக மக்கள் அலைபாயுது

படகும் பறந்து கரையேகுது
பலா வாழை மரம் சாயுது
விடாது புயலும் விரட்டுது
விழிப்பாய் இருப்பது நல்லது.

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...