சுத்திச் சுத்திக் காத்தடிக்குது
சூறா வளிக் காத்தடிக்குது
கத்திக் கத்திக் காக்கைகளும்
கண்ட திசையில் கண்மறையுது
தென்னை மரங்கள் நாணலைப்போல்
தேகம் வலைந்து ஒடியுது
பண்ணை வயலின் நெற்கதிர்கள்
பாய்ந்து தூரம் பறக்குது
ஓலைக் குடிசை காலியாகுது
ஓட்டு வீடும் ஓட்டையாகுது
ஆல மரமும் அடிசாயுது
ஆக மக்கள் அலைபாயுது
படகும் பறந்து கரையேகுது
பலா வாழை மரம் சாயுது
விடாது புயலும் விரட்டுது
விழிப்பாய் இருப்பது நல்லது.
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...
No comments:
Post a Comment