அம்மா அப்பா சொல்கேட்டு
அழகாய் பள்ளிச் சென்றிடுவேன்
சும்மா சோம்பிக் குந்தாமல்
சுறுசுறுப் பாக ஆடிடுவேன்
நாளும் குறளைப் படித்திடுவேன்
நாட்டு நடப்புகள் அறிந்திடுவேன்
கேளிர் சேர்ந்தே வாழ்ந்திடுவேன்
கேள்விகள் கேட்டே தெளிந்திடுவேன்
கூண்டுக் கிளியாய் இல்லாமல்
குவலயம் சுற்றி வந்திடுவேன்
ஈன்ற தாயை வணங்கிடுவேன்
என்றும் தந்தை மதித்திடுவேன்
பாட்டும் கூத்தும் கற்றிடுவேன்
பழந்தமிழ் கலைகள் காத்திடுவேன்
வாட்டும் வறுமை சூழ்ந்தாலும்
வாழ்வில் நேர்மை கடைபிடிப்பேன்
Tuesday, January 17, 2012
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...
No comments:
Post a Comment